மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர பதவி விலகத் தீர்மானம்!

268 0

1291697912amaraமீன்பிடித் துறை அமைச்சர் மகிந்த அமரவீர பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீர தமது பதவியை ராஜினாமா செய்வதாக ஊகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்துடன் இவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும் பதவி வகிக்கின்றார்.

அண்மையில் மீன்பிடித்துறை அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் தனது ஊகத்தை வெளியிட்டுள்ளார்.

‘நான் மீன்பிடித்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். எனக்கு தொடர்ந்தும் அமைச்சில் பதவி வகிக்க முடியாது. அமைச்சின் சில அதிகாரிகளுடன் என்னால் தொடர்ந்தும் பணியாற்ற முடியாது. பணிகளை ஆற்றக்கூடிய வகையில் அவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. எனக்கு சேவையாற்ற வேறும் ஓர் அமைச்சினை தருமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரவுள்ளேன். அவ்வாறு கிடைக்காவிட்டாலும் பராவாயில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மீன்பிடித்துறை அமைச்சராக பணிகளை முன்னெடுக்குமாறு பிரதி அமைச்சர் திலிப் வெதாராச்சியிடம், அமைச்சர் மஹிந்த அமரவீர கோரியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.