கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு

201 0

காவல்துறை மற்றும் கொழும்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் கொவிட் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய கொட்டாஞ்சேனை சென் லூசியஸ் தேவாலயம் மற்றும் முகத்துவாரம் பொன் ஸ்டார் மைதானம் ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே, கொழும்பு நகர எல்லைக்குள் வசிக்கும் இதுவரை கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்டோர் மேற்படி பிரதேசங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.