நாட்டை முடக்காமல் மக்களை பழிவாங்குகிறதா அரசாங்கம் – மரிக்கார்

162 0

நாட்டை முடக்காமல் மக்களை அரசாங்கம் பழிவாங்குகின்றதா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் எஞ்சியதை கடவுளிடம் ஒப்படைப்பதாக அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகின்றார். ஆனால் இவர்களது செயற்பாடுகளால் கடவுளும் கூட அரசாங்கத்தின் மீது கடும் கோபத்திலேயே இருக்கின்றார்.

முதற்கட்ட தடுப்பூசியை பலருக்கும் வழங்கிய அரசாங்கம் இரண்டாம் கட்ட தடுப்பூசியை மறந்துவிட்டது. அதனாலேயே அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் பாரிய தாமதம் ஏற்பட்டது. கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி வழங்குவதே ஒரே தீர்வு என்று கூறும் அரசாங்கம் , அதற்கான வேலைத்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுக்கவில்லை என்றார்.