புதிதாக அரிசி ஆலைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தம்

194 0

நாடளாவிய ரீதியில் புதிதாக அரிசி ஆலைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இடைத் தரகர்கள் போலியாக அரிசி ஆலை உரிமையாளர்களாக பதிவு செய்து கொள்வதாக கிடைத்த தகவல்களுக்கு அமைய மேற்படி தீர்மானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய அரிசி ஆலைகள், பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் இது தொடர்பான சுற்றுநிரூபம் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.