கடல் அட்டைகள் பிடித்த 3 பேர் கைது!

176 0

மட்டக்களப்பு கல்குடா கடலில் சட்டவிரோதமாக படகு ஒன்றில் கடல் அட்டை பிடித்துக்கொண்டிருந்த 3 மீனவர்களை நேற்று (11) நள்ளிரவு கைதுசெய்துள்ளதாக வாகரை கடற்படையினர் தெரிவித்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் எனவும் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.