வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் ஜஸ் போதைப் பொருள் மற்றும் ஹெரோயினுடன் இருவரை நேற்று (11) இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட இருவரும் பிறைந்துறைச்சேனையை சேர்ந்தவர்கள் எனவும் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவித்த காவல்துறையினர் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.