மடுமாதா திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை : ஆயர் அறிவிப்பு

256 0

நீண்ட பயணங்களை மேற்கொண்டு மடுத் திருத்தலத்தின் ஆவணி திருவிழாவில் கலந்து கொள்ள வருகின்றவர்கள் தமது பயணங்களை நிறுத்தி நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னார் மடுத் திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் மடு திருத்தலத்தில் நேற்று புதன் கிழமை முற்பகல் 11 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல்,மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர்,மடுத் திருத்தலத்தின் பரிபாலகர்,சுகாதார சேவைகள் பணிப்பாளர்,சுகாதாரத் துறையினர், அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மறைமாவட்ட ஆயர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மடு திருத்தலத்தின் ஆவணித் திரு விழா எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக் கிழமை மாலை 6 மணிக்கு மாலை ஆரா தனையும், அதனைத் தொடர்ந்து தூய நற்கருணை பவனியையும்,நடத்தி தூய நற்கருணை ஆசியையும் வழங்குவோம். ஆவணி மாதம் 15 ஆம் திகதி ஞாயிற் றுக்கிழமை மருதமடு அன்னையின் திரு விழாவாகிய விண்ணேற்பு திருவிழா திருப் பலி காலை 6.15 மணிக்கு ஆயர்கள் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்படும். திருப்பலியைத் தொடர்ந்து திருச் சொரூப பவனியும், திருச்சொரூப ஆசிர் வாதமும் வழங்கப்படும். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

அரசாங்கத்தினதும்,சுகாதார திணைக்கள அதிகாரிகளினதும் சுகாதார வழிகாட்டுதல்களின்படி நாங்கள் நடந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் மடு அன்னையின் ஆவணித் திருவிழா திருப்பலிகள் நான்கு ஒப்புக் கொடுக்கப்படும். காலை 6.15 மணிக்கும், அதனைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கும், காலை 11 மணிக்கு மூன்றாவது திருப்பலியும், இறுதியாக மதியம் 12.30 மணிக்கு நான்காவது திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்படும். குறித்த திருப்பலிகளில் மொத்தமாக 150 நபர்கள் மாத்திரம் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே இக்கால கட்டத்தில் மடு அன்னையின் திருவிழா அன்று மடுத் திருத்தலத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தர முடியாது. மடு வீதி வரை வந்தாலும் மடு திருத்தலத்துக்குச் செல்ல முடியாமல் பாதுகாப்பு தரப்பினரால் திருப்பி அனுப்பப் படுவார்கள். ஏனைய நாட்களில் நீங்கள் ஆலயத்துக்கு காலையில் வந்து மாலையில் திரும்பிச் செல்ல முடியும். தங்கி நிற்க முடியாது. யாத்திரிகர்கள் பலர் பல தூர இடங்களில் இருந்து வருகை தர முயற் சிக்கின்றனர். அவ்வாறு வருகின்றவர்கள் தமது வருகையை நிறுத்திக் கொள்ளுங்கள். இங்கு வந்தால் தங்க இடமில்லை.

திருவிழாவுக்கு ஆலயத்தினுள் செல்ல முடியாத நிலை ஏற்படும். மேலும் மடு திருத்தலத்தை அண்மித்த கிராமங்களான பண்டிவிரிச்சான், பரப் புக்கடந்தான், பாலம்பிட்டி, தட்சணா மருதமடு போன்ற கிராமங்களுக்குக் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே பல்வேறு பிரச்சினைகள் உள் ளமையினால் உங்களின் நீண்ட பய ணத்தை நிறுத்தி உங்கள் வீடுகளில் இருந்து தொலைக்காட்சி, இணையத்தளங்கள் ஊடாக திருவிழாவை பார்க்க முடியும்- என்றார்.தமது பயணங்களை நிறுத்தி நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ளவேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னார் மடுத் திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் மடு திருத்தலத்தில் நேற்று புதன் கிழமை முற்பகல் 11 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல்,மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர்,மடுத் திருத்தலத்தின் பரிபாலகர்,சுகாதார சேவைகள் பணிப்பாளர்,சுகாதாரத் துறையினர், அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே மன்னார் மறைமாவட்ட ஆயர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மடு திருத்தலத்தின் ஆவணித் திரு விழா எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக் கிழமை மாலை 6 மணிக்கு மாலை ஆரா தனையும், அதனைத் தொடர்ந்து தூய நற்கருணை பவனியையும்,நடத்தி தூய நற்கருணை ஆசியையும் வழங்குவோம். ஆவணி மாதம் 15 ஆம் திகதி ஞாயிற் றுக்கிழமை மருதமடு அன்னையின் திரு விழாவாகிய விண்ணேற்பு திருவிழா திருப் பலி காலை 6.15 மணிக்கு ஆயர்கள் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்படும். திருப்பலியைத் தொடர்ந்து திருச் சொரூப பவனியும், திருச்சொரூப ஆசிர் வாதமும் வழங்கப்படும். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

அரசாங்கத்தினதும்,சுகாதார திணைக்கள அதிகாரிகளினதும் சுகாதார வழிகாட்டுதல்களின்படி நாங்கள் நடந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் மடு அன்னையின் ஆவணித் திருவிழா திருப்பலிகள் நான்கு ஒப்புக் கொடுக்கப்படும்.

காலை 6.15 மணிக்கும், அதனைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கும், காலை 11 மணிக்கு மூன்றாவது திருப்பலியும், இறுதியாக மதியம் 12.30 மணிக்கு நான்காவது திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்படும். குறித்த திருப்பலிகளில் மொத்தமாக 150 நபர்கள் மாத்திரம் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே இக்கால கட்டத்தில் மடு அன்னையின் திருவிழா அன்று மடுத் திருத்தலத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தர முடியாது.

மடு வீதி வரை வந்தாலும் மடு திருத்தலத்துக்குச் செல்ல முடியாமல் பாதுகாப்பு தரப்பினரால் திருப்பி அனுப்பப் படுவார்கள். ஏனைய நாட்களில் நீங்கள் ஆலயத்துக்கு காலையில் வந்து மாலையில் திரும்பிச் செல்ல முடியும். தங்கி நிற்க முடியாது. யாத்திரிகர்கள் பலர் பல தூர இடங்களில் இருந்து வருகை தர முயற் சிக்கின்றனர். அவ்வாறு வருகின்றவர்கள் தமது வருகையை நிறுத்திக் கொள்ளுங்கள். இங்கு வந்தால் தங்க இடமில்லை.

திருவிழாவுக்கு ஆலயத்தினுள் செல்ல முடியாத நிலை ஏற்படும். மேலும் மடு திருத்தலத்தை அண்மித்த கிராமங்களான பண்டிவிரிச்சான், பரப்புக்கடந்தான், பாலம்பிட்டி, தட்சணா மருதமடு போன்ற கிராமங்களுக்குக் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே பல்வேறு பிரச்சினைகள் உள் ளமையினால் உங்களின் நீண்ட பய ணத்தை நிறுத்தி உங்கள் வீடுகளில் இருந்து தொலைக்காட்சி, இணையத்தளங்கள் ஊடாக திருவிழாவை பார்க்க முடியும்- என்றார்.