இன்று 1,992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

174 0

நாட்டில் மேலும் 1,992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 338,162 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரத்தில் தாமதமாக அறிவிக்கப்பட்ட 3,223  தொற்றாளர்களின் எண்ணிக்கையையும் சேர்த்து மொத்தத்தில் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் தொற்று நோயியல் பிரிவு இன்று அறிவித்திருந்தது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  2,644 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 298,162 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 34,778 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதேவேளை, மேலும் 111 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  5,222 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.