சமூக வலைத்தளங்களின் போலி கணக்குகளை முடக்குவது ஊடக அடக்குமுறை அல்ல: அரசாங்கம்

159 0

போலியான சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்கள் தொடர்பிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதில் எவ்வித தனிப்பட்ட அடக்குமுறையும் இல்லை. எதிர்க்கட்சி இதனை அரசியலாக்குகின்றது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், போலியான சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் 5 நட்சத்திர ஜனநாயக நாடுகள் சட்டங்களை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தியுள்ளன. சமூக வலைத்தளங்கள் அல்லது ; சமூக ஊடகங்கள் ஊடாக வெளியிடப்படும் ஏதேனுமொரு கருத்திற்கு உரிமை கோருபவர்கள் காணப்பட்டால் அதில் எவ்வித சிக்கலும் இல்லை.

ஆனால் வெளியிடப்படும் கருத்துக்களுக்கு பொறுப்பேற்பவர் இல்லையாயின் அது சகலருக்கும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும். இவ்வாறான கணக்குகள் தொடர்பிலேயே சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் எவ்வித தனிப்பட்ட அடக்குமுறையும் கிடையாது என்றார்.