கோட்டே மாநகர செயலருக்கு கொவிட்

206 0

ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே மாநகராட்சி மன்றத்தின் செயலாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகர தலைமை மருத்துவ அதிகாரி மனோஜ் ரொட்ரிகோ தெரிவித்தார்.

அதன்படி கோட்டே மாநகர செயலகத்தை இரு வாரங்களுக்கு மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநகர செயலாளரின் கீழ் பணியாற்றிய கணக்காளர், கணினி அலுவலர் மற்றும் அலுவலக ஊழியரை தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.