அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய குழு நியமனம்

248 0

ஆசிரியர் – அதிபர்களின் சம்பளப் பிரச்சினை தொடர் பாக ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய அமைச்சரவை உப குழுவொன்று நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இந்த அமைச் சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் குறித்து ஆராய்ந்து அடுத்த அமைச் சரவை கூட்டத்தில் அறிக்கையிடுவதற்காகக் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த அமரவீர, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இந்த குழுவில் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இணையவழிக் கற்பித்தலைப் புறக்கணித்து முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 29ஆவது நாளாகவும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.