மணல் ஏற்றிய மூவர் கைது

241 0

அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராமநாதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வீதிக்காவல் கடமையிலிடுபட்ட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவளுக்கமைய அனுமதி பத்திரத்துக்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது டிப்பர் வாகனமும் அதன் சாரதிகளுமே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதிகள் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் நடைபெற்று பின் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.