ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகளை தீர்க்க அமைச்சரவை குழு நியமனம்

183 0

ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை தீர்ப்பதற்கும் மற்றும் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் 4 பேர் கொண்ட அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை குழு கூட்டத்தின் போது குறித்த அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதன்படி, அமைச்சர்களான விமல் வீரவன்ச, பிரசன்ன ரணதுங்க, மஹிந்த அமரவீர மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியவர்கள் குறித்த குழுவின் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.