தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றுக்கு 33 பேர் பலி

200 0

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கோவையில் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று 1,58,797 பேரது கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 1,997 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 2 பேர் மராட்டியத்திலிருந்து வந்தவர்கள்.

இதனால், தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,69,398 ஆக உயர்ந்துள்ளது. 1,943 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 33 பேர் பலியாகியுள்ளனர். 20,138 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கோவையில் 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 196 பேரும், ஈரோட்டில் 161 பேரும், செங்கல்பட்டில் 130 பேரும், தஞ்சாவூரில் 119 பேரும், திருவள்ளூரில் 106 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.