கைது செய்யப்பட்ட 44 பேரும் நீதிமன்றின் முன்னிலையில்

183 0

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 44 பேர் நேற்று (04) கைது செய்யப்பட்டனர்.

சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இவர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 44 பேரும் உடனடி என்டிஜன் பரிசோதனைக்கு நேற்று உட்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 44 பேருக்கும் கொரோனா பரிசோதனையின் முடிவுகள் நெகடிவ் ஆக வந்துள்ளமையால் இவர்கள் அனைவரும் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.