யாழில் மேலும் ஒருவர் கொரோனாவால் பலி

196 0

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயால் உயிரிழந்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுண்டுக்குளியைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இதன்மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொவிட்-19 நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130ஆக உயர்வடைந்துள்ளது.