ஹெரொயினுடன் மாலைத்தீவு பொதுமகன்கள் கைது

360 0

arrested1சர்வதேச ரீதியாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த இரண்டு மாலைத்தீவு நாட்டவர்கள் தெஹிவளை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று அதிகாலையில் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது இவர்களிடமிருந்து வில்லைகளாக்கப்பட்ட 385 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இலங்கையூடாக பாகிஸ்தானுக்கு போதைப்பொருட்களை கடத்தியுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.