சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி, அரசாங்க அலுவலகங்களைத் திறப்பதில் எந்தவிதமான தவறுகளும் இல்லை என முன்னாள் ஜனாதிபதியும்,சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன எம்.பி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன எம்.பி, இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நிலைகளில், உலகின் ஏனைய நாடுகள் இந்த நிலைமையை எவ்வாறு கையாண்டுள்ளன என்பதைப் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாடு முகங்கொடுக்கும் ஆபத்தான நிலையை உணர்ந்துக்கொள்ளும் அதேவேளை, நாட்டையும் தொடர்ந்து மூடி வைத்திருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி அரசாங்க அலுவலகங்களைத் திறப்பதில் எந்தவிதமான தவறும் கிடையாது. அரசாங்க அலுவலகங்களை தொடர்ந்து மூடியிருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.