டோக்கியோ ஒலிம்பிக் – ஈட்டி எறிதலில் அன்னு ராணி ஏமாற்றம்

202 0

டோக்கியோ ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி 14வது இடத்தைப் பிடித்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று காலை பெண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் 15 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் அன்னு ராணி கலந்து கொண்டார். அவர் தனது முதல் வாய்ப்பில் 50.35 மீ தூரம் எறிந்தார். இரண்டாவது வாய்ப்பில் 53.19 மீ தூரம் எறிந்தார். மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பில் 54.04 மீ தூரம் எறிந்தார். இறுதியில் 14வது இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.