உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டி – வைகோ திட்டவட்டம்

435 0

vaiko1சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியால் சோர்ந்துவிடவில்லை என்றும், உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடும் எனவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
தமிழர்களின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
திமுக, அதிமுக ஆகிய ஊழல் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகம் விடுபட வேண்டும்.
தமிழகத்தில் ஊழலற்ற அரசியல் அமையவே மக்கள் நலக் கூட்டணி உருவானது.
நாங்கள் தொடர்ந்து பயணிப்போம். சட்டப்பேரவைத் தேர்தலில், பணத்தின் தாக்கம் அதிகம் இருந்ததால் மக்கள் நலக் கூட்டணியின் கொள்கைகள் சென்றடையவில்லை.
சட்டப் பேரவைத் தேர்தல் தோல்வியால் நாங்கள் சோர்ந்துவிடவில்லை.
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடும்.
முல்லை பெரியாறு, பாலாறு உட்பட தமிழக வாழ்வாதார விஷயங்கள், ஈழப் பிரச்சினைக்காக போராடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.