காங்கேசன்துறை முதல் வவுனியா வரையான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

168 0

வடக்கு தொடருந்து வீதியின் காங்கேசன்துறை முதல் வவுனியா வரையான நாளாந்த தொடருந்து சேவைகள் நாளை முதல் மீண்டும் இடம்பெறவுள்ளன.

தொடருந்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த தொடருந்து காலை 5.15க்கு காங்கேசன் துறையிலிருந்து வவுனியா நோக்கியும் பிற்பகல் 5 மணிக்கு வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை நோக்கியும் பயணிக்கவுள்ளது.

நடமாட்டத் தடைக்காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குறித்த தொடருந்து சேவை 72 நாட்களின் பின்னர் நாளை மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.