ரிஷாட்டின் மனைவியிடம் பொரளை பொலிஸார் வாக்குமூலம் பதிவு

187 0

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு சென்றுள்ள பொரளை பொலிஸை சேர்ந்த விசேட குழு ஒன்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.

ஹட்டன், டயகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த நிலையில் கடந்த தினம் உயிரழந்திருந்தார்.

குறித்த மரணம் தொடர்பில் பொலிஸாரினால் பல்வேறு கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.