இணுவிலில் தம்பதி மீது வாள் வெட்டு

186 0

இணுவில் காரைக்கால் பகுதியில்,  வன்முறைக் கும்பல் ஒன்று நேற்றிரவு(20)  நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில்  கணவன் மற்றும்  மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த தம்பதியின் மகனைத் தேடி வந்த அக்கும்பல்  அவர் வீட்டில் இல்லாததால்  ஆத்திரமடைந்து, அவரது தந்தை மற்றும் தாயைத் தாக்கிவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.