இஷாலியின் மரணம்: அமைச்சர் வீரசேகர கூறியது என்ன?

166 0

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த 16 வயதான, ஜூட் குமார் இஷாலினி என்ற சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

“இந்த விடயம், சிறுபான்மையினரை உள்ளடக்கியதாக இருப்பதால், இந்த விடயம் தொடர்பில், அதிகமாக விளம்பரப்படுத்தப்படக்கூடாது, குறிப்பாக அரசியல் மயமாக்கப்படக்கூடாது. அளவுக்கு அதிமான முக்கியத்துவத்தை வழங்கவேண்டாம்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.