நிழல் அமைச்சரவையில் மேலும் பிளவு

419 0

indexநிழல் அமைச்சரவையில் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படபோவதில்லை என மஹிந்த அணியினரின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கரம நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிழல் அமைச்சரவையில் ஊடாக தாம் அதிகாரத்திற்கு பேராசை கொள்வதாக மக்கள் நினைக்ககூடும்.
தம்மிடம் குறைப்பாடுகள் இருந்தமையினாலேயே மக்கள் தம்மை தோல்வி அடையசெய்ததாக தெரிவித்த அவர், தொடர்ந்தும் தாம் அந்த குறைப்பாடுகளுடன் செயற்பட்டால் தம்மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத தன்மை ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.
எனவே மக்களுடன் இணைந்து அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்ககை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த நிழல் அமைச்சரவையில் இருந்து லொஹான் ரத்வத்த விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.