நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 743 பேர் கைது

170 0

நாட்டில்  தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 743 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

அவர்களில் அதிகளவானோர் குளியாபிட்டிய பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பேச்சாளர் மேலும் கூறினார்.

முகக்கவசம் அணிவது தொடர்பில் இன்று முதல் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.