மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு

338 0

மட்டக்களப்பு கிரான்குளம் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (15) மாலையில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான்குளம் வடக்கு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளையின் தாயான 52 வயதுடைய ந.பிரமராணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

நேற்று மாலை வழமைபோல தனது வெள்ளரி தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவதற்கு நீர் பாம்மில் மின்சார கையாண்ட போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரடப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.