தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி அதிக அளவில் வேண்டும் என மத்திய அரசிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி உணவுத்துறையில் தமிழகம் சாதனை படைக்கும்.
* பயிர் சாகுபடி பரப்பளவை 75% அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழகத்தில் கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது.
* தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி அதிக அளவில் வேண்டும் என மத்திய அரசிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.
* கொரோனா குறைந்ததால்தான் டாஸ்மாக் கடை திறக்கப்படுகிறது.
* டெல்லியில் வரும் 17ந்தேதி பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.