காலவரையறையின்றி பல பகுதிகள் முடக்கம்!

222 0

பொகவந்தலாவை – 319 F கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஆரியபுர, சிரியுர  பொகவந்தலாவை மேல்பிரிவு ஆகிய பகுதிகள்  காலவரையறையின்றி முடக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நேற்று மாலை 28 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்தே இன்று அதிகாலை முதல் குறித்த பிரதேசம் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

118 குடும்பங்களைச் சேர்ந்த 375 பேர் வசிக்கும் குறித்த பிரதேசத்திலிருந்து யாரும் வெளியில் செல்லவும், வெளியார் யாரும் உள்ளே வரவும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.