அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!

266 0

அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டு முதல் முதலாம் தரத்திற்காக 45 மாணவர்களை இணைத்து கொள்வது தொடர்பாகவே வழக்கு தொடரவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஏற்கனவே உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறி கல்வியமைச்சு செயற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.