சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் அறுவர் கைது

231 0

கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்இ மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதை சாதகதாகமாக்கி, சட்டவிரோதமான முறையில்
மதுபான விற்பனையில் ஈடுபட்ட அறுவர் மட்டக்களப்பில் கைதாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட மதுவரி அத்தியட்சகர் எஸ்.ரஞ்சனின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மது வரித்திணைக்கள பொறுப்பதிகாரி நியூட்டன் அவுஸ்கோனின் தலைமையில்இ ஏறாவூர்ப்பற்றுஇஏறாவூர்இமண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது 180 மில்லிலீற்றர் கொள்ளவுடைய 100 மதுபானப் போத்தல்கள் மற்றும் மூன்று கள் போத்தல்களுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில்இ நீதிமன்றம் ஊடாக சட்டநடவடிக்கைக்கும் அவர்களை உட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.