தடையில்லா மின்சாரம் வழங்க இரு மின்வழித்தட வசதி- அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

239 0

சென்னையில் கூடுதலாக 7 ஆஸ்பத்திரிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக இரு மின்வழித்தட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்து உள்ளார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கொரோனா சிகிச்சை மற்றும் பிற சிகிச்சைகளுக்காக வரும் பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்களின் நலத்தினை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சரின் ஆணைப்படி சென்னையில் கூடுதலாக 7 ஆஸ்பத்திரிகளில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக இரு மின்வழித்தட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் தண்டையார்பேட்டை தொற்று நோய் அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் உள்ளது போல இரு மின்வழித்தட வசதிக்கான தொடர் மின் சுற்று கருவி மேலும் 7 ஆஸ்பத்திரிகளில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கொரோனா சிகிச்சை மற்றும் பிற சிகிச்சைகளுக்காக வரும் பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்களின் நலத்தினை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சரின் ஆணைப்படி சென்னையில் கூடுதலாக 7 ஆஸ்பத்திரிகளில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக இரு மின்வழித்தட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் தண்டையார்பேட்டை தொற்று நோய் அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் உள்ளது போல இரு மின்வழித்தட வசதிக்கான தொடர் மின் சுற்று கருவி மேலும் 7 ஆஸ்பத்திரிகளில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.