கொழும்பிற்கு வருபவர்களை கண்காணிக்க விசேட பொலிஸ் குழுக்கள்!-அஜித் ரோஹண

213 0

அத்தியாவசிய சேவைகளுக்காக கொழும்பிற்கு வரும் அனைவரும் உண்மையிலேயே இதுபோன்ற ​சேவைகளில் ஈடுபடுகின்றனரா என்பது தொடர்பில் கண்காணிக்க 6 விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

பயணத்தடைக்கு மத்தியில் கடந்த சில தினங்களாக கொழும்பிற்கு அதிகளவான வாகனங்கள் வருவதை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.