அரசாங்கம் பதவி விலக வேண்டும்-ஐக்கிய மக்கள் சக்தி

405 0

பயணக் கட்டுப்பாட்டைக் கூட சரியாக முகாமைத்துவம் செய்துகொள்ள முடியாத நிலைமையிலேயே அரசாங்கம் இருப்பதாகவும், இதனால் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாட்டுக்குள் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் சரியான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை. அத்துடன் அரசாங்கம் பொருளாதாரம், இராஜதந்திர தொடர்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துள்ளது.

இதனால் இந்த அரசாங்கத்தினால் எதனையும் செய்ய முடியாது என்பது உறுதியாகியுள்ளது. இதனால் அரசாங்கம் விலக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.