வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் இறந்த இருவருக்கு கொரோனா

215 0
வவுனியா மற்றும் யாழ் மாவட்டங்களில் நேற்று  இருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இன்று (02.06.2021) மரணமடைந்துள்ளார்.
குறித்த நபர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் மரணமடைந்துள்ளார். வவுனியா நந்திமித்திரகம பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குள் வசிக்கும் 72 வயதுடைய முதியவர் ஒருவர் நேற்று  உயிரிழந்துள்ளார்.
நேற்று ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். அவரின் மாதிரிகள்
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று பரிசோதனைக்காக எடுக்கப்பட்டபோது அவருக்கு தொற்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.