கரவெட்டி சுகாதார பிரிவில் 16 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 161 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஏற்கனவே தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட நெல்லியடி மதுபான விற்பனை நிலையம் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் உட்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அளவெட்டி வைத்தியசாலையில் 11 பேரும் யாழ் சுகாதார பிரிவில் ஒருவருக்கும் என யாழ் மாவட்டத்தில் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில்
முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேர்,
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,
கிளிநொச்சி மாவட்டத்தில்
கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேர்,
அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்,
வவுனியா மாவட்டத்தில்
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேர்,
மன்னார் மாவட்டத்தில்
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,
மன்னார் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.