ஓமனியாமடு ஆற்றில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட 14 பேர் கைது!

278 0

மட்டக்களப்பு – ஓமனியாமடு ஆற்றில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  8 உழவு இயந்திரங்களும், 6 கனரக ரக வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்தே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மேலும் சிலர் தப்பியோடியுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை பயணத்தடையை மீறி மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெற்று வருவதாக மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.