வாழைச்சேனையில் 122 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை

229 0
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று புதன்கிழமை நூற்றி இருபத்தி இரண்டு (122) பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்றினால் முடக்கப்பட்ட நிலையில் காணப்படும் வாழைச்சேனை மருதநகர் கிராமத்தினை விடுவிப்பு செய்யும் வகையில் மேலெழுவாரியாக  நூற்றி இருபத்தி இரண்டு (122) பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றது.

குறித்த பீ.சி.ஆர் பரிசோதனையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலை பரவியுள்ள நிலையிலும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலும் அதிகரித்து காணப்படும் நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து பிரதேசத்தினை பாதுகாத்துக் கொள்ளுமாறு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்