இன்று முதல் இலங்கையில் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களும் திறக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 7ஆம் திகதி நீக்கப்படவிருந்த பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் மக்களுக்கு சிரமமின்றி வாழ்க்கையை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்தே மக்களின் நலனை கருத்திற் கொண்டு சதொச விற்பனை நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.