கடை உடைத்து திருடியவர் குடுவுடன் கைது!

193 0

aithuயாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் தெற்கு பகுதியிலுள்ள கடை ஒன்று உடைத்து 45,000 ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், மூளாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று(செவ்வாய்கிழமை) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் குடு போதைப் பொருள் மற்றும் 41,000 ரூபாய் பணத்துடன், கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.