எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் பின்பகுதியில் நீர்க்கசிவு!

213 0

தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் பின்பகுதியில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது தொடர்பில் ஆராய்வதற்காக கடற்படையின் 9 சுழியோடிகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

கப்பலில் பரவிய தீ முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடற்படையினர் கப்பலை கண்காணித்ததுடன், கப்பலின் பின்பகுதி அதிகமாக நீரில் மூழ்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எஞ்சின் அறை உள்ளிட்ட பகுதிகளில் நீர் உட்புகுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார். மீட்பு நிறுவனம், வர்த்தகக் கப்பல் நிறுவனம் ஆகியவற்றுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கடற்படையின் 9 சுழியோடிகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.