பசளையின் தரம் குறித்து மூன்று ஆராய்ச்சி நிலையங்கள்

275 0

இறக்குமதி செய்யப்படும் பசளையின் தரம் குறித்து மூன்று ஆராய்ச்சி நிலையங்கள் கண்டறியும் என அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (01) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில ,அரசாங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

பல சுகாதார சிக்கல்களுக்கு காரணமான ரசாயன பசளை இறக்குமதியை தடை செய்து சேதனப் பசளையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் மேலும் கூறினார்.