மட்டக்களப்பில் இன்று ஒருநாளில் 3 பேர் உயிரிழப்பு

419 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்து 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதேவேளை மாவட்டத்தில் தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் எழுமாறாக இடம்பெற்று வருகின்றது இந்த நிலையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் கீழ் உள்ள சுகதார வைத்திய அதிகாரி பிரிவுகளான மட்டக்களப்பில் 20 பேருக்கும் களுவாஞ்சிக்டியில் 2 பேருக்கும், வாழசை;சேனையில் 2 பேருக்கும், காத்தான்குடியில் 15 பேருக்கும்,

கோறளைப்பற்று மத்தியில் 7 பேருக்கும், ஓட்டுமாவடியில் 4 பேருக்கும், செங்கலடியில் 7 பேருக்கும், ஏறாவூரில் 8 பேருக்கும், பட்டிருப்பில் 4 பேருக்கும் , ஆரையம்பதியில் ஒருவருக்கும்;, கிரானில் 3 பேருக்கும், பொலிசார் 3 பேருக்கும் சிறைக்கைதிகள் 6 பேர் உட்பட 84 பேருக்கு தொற்று உறுதி இன்று செவ்வாய்க்கிழமை (01) கண்டறியப்பட்டுள்ளது.

தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து செல்லுகின்றது எனவே பொதுமக்கள் பயணைத்தடையை மீறி வீட்டில் இருந்து தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்தள்ளார்.