அம்பாறை- திருக்கோவில் பொலிஸார் 11 பேருக்கு கொரோனா!

220 0

அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இன்று திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 38 பொலிஸாருக்கு  அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பரிசோதனை முடிவிலேயே 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பொலிஸாரை, சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தற்காலிகமாக பொலிஸ் நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.