இலங்கையில் மேலும் 1,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

326 0

இலங்கையில் மேலும் 1,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 184,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 151,740 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இவர்களில் 1,441 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.