வியட்நாமிலிருந்து வரும் பயணிகளுக்கு இலங்கை தடை விதிப்பு

211 0

கடந்த 14 நாட்களில் வியட்நாமுக்கான பயண வரலாறு கொண்ட பயணிகள் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இலங்கை சிவில் விமான அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தேமியா அபேவிக்ரம இன்று(31) தெரிவித்தார்.

இதன்படி இத்தடை உடன் அமுலுக்கு வருவதுடன் மறு அறிவித்தல் வரும் வரை தொடரும்.இது குறித்து அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமான அதிகார சபை தெரிவித்துள்ளது.

வியட்நாமில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டதையடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.