இலங்கை வெளிநாட்டு சேவை தரம் III ஆட்சேர்ப்பு திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

206 0

இலங்கை வெளிநாட்டு சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020 (2021)க்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி எதிர்வரும் 4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


09-04-2021 வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிட்டதற்கு அமையவே விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதெல்லை அமையுமென்றும் அதில் மாற்றங்கள் செய்யப்படவில்லையென்றும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020 (2021)க்கான விண்ணப்ப முடிவுத் திகதியாக 10-05-2021 அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது முடிவு திகதி எதிர்வரும் 4ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.