மட்டக்களப்பில் பயணக் கட்டுப்பாட்டை மீறும் மக்கள்

218 0

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டம் இன்று அதிகரித்து காணப்பட்டது.தொடர்ச்சியான பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக நகர் பகுதிக்குள் மக்கள் வருகை தந்திருந்தனர்.இவ்வாறு வருகை தந்தவர்களை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கண்காணித்து அனுமதி வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் பொதுமக்களின் நடமாட்டம் நகர் பகுதியில் அதிகரித்து காணப்படுவதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.இந்நிலையில் நகர்ப்பகுதிக்குள் வரும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரும் ஈடுபட்டிருந்தனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் நகர் பகுதி மட்டுமல்லாது புறநகர் பகுதியிலும் மக்களின் நடமாட்டம் அதிகரித்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.