கொரோனா அச்சுறுத்தல்- கொட்டகலையில் 10 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில்!

206 0

நுவரெலியா- கொட்டகலை, பொரஸ்ட்கிறிக் தோட்டத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர், சுயதனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த தோட்டத்தில்  72 வயதான ஆணொருவர், சுகயீனம் காரணமாக திடீரென நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு, டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பீ.சீ.ஆர்.பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்தே உயிரிழந்தவர் வசித்து வந்த தொடர் குடியிருப்பு தொகுதியிலுள்ள அனைவரும், சுயதனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.