உணவு வாங்க பணமின்றி தவிக்கும் எம்மை அரசியல்வாதிகள் கண்டுக் கொள்ளவில்லை- வவுனியா மக்கள்

237 0

நாட்டில் பயணத்தடை தொடர்ந்து நடைமுறையில் உள்ளமையினால் கையில் பணமின்றி உணவு பொருட்களை கொள்வனவு செய்யமுடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வவுனியாவிலுள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வவுனியா- ஈஸ்வரிபுரம், சுந்தரபுரம் உட்பட்ட குடியேற்ற திட்ட கிராமங்களில் வசிக்கும் நாளாந்த கூலித் தொழிலாளர்கள், நாளாந்தம் வருமானம் பெறுகின்றவர்கள் ஆகியோரின் குடும்பங்கள் அனைத்தும், உணவுப்பொருட்களை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறு உணவு பொருட்களை வாங்க முடியாமல் துன்பப்படும் எம்மை, அரசியல்வாதிகளோ சம்மந்தப்பட்ட அதிகாரிகளோ கண்டுக்கொள்ளாமல் இருப்பது மிகவும் கவலையளிப்பதாக அப்பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் தேர்தல் காலங்களில் மாத்திரம் தங்களின் வாக்குகளை பெறுவதற்காக உதவிகளை வழங்கி, அரசியல்வாதிகள் ஏமாற்றுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.